சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து 38 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சூடானின் தலைநகரான கார்டோம் நகருக்கு தெற்கு பகுதியில் சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஃபுஜா என்னும் கிராமத்தில் அரசாங்கத்திற்குரிய தர்சயா தங்க சுரங்கம் இருக்கிறது. அச்சுரங்கம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தவர்கள் சென்றபின் உள்ளூரில் இருக்கும் சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.
அப்போது திடீரென்று சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த இடிபாடுகளில் மாட்டி 8 நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் அதிகமான தங்க சுரங்கங்கள் இருக்கும் நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக கடைபிடிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.