Categories
உலக செய்திகள்

Omicron: அபாய கட்டம்…. வெளியான பரபரப்பு செய்தி….!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு உலக நாடுகள் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இதனால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது.

இந்நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவும் விகிதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றும் நிலையில் ஒமைக்ரான் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |