தமிழக அரசு முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி உலக,வங்கியின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு முதல் கட்டமாக 2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலைவாய்ப்பு ஆகியவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.