Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறுக்கே வந்த பாம்பு…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரை அடுத்துள்ள கவரங்குளம் பகுதியில் மலை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென பாம்பு ஒன்று மலைராஜை கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த மலைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மலைராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |