லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் பிரையண்ட் நகர் பகுதியில் லாட்டரி எண்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய பேப்பரையும் பறிமுதல் செய்தனர்.