Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வை அதிகரித்தது. அதன்படி தற்போது 30% வரை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 2016-ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 6,000-ல் இருந்து 18,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ஊதியம் உயர்த்தப்பட்டால் 28,000-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நல்ல செய்தி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில் சம்பள உயர்வில் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள பயனடைந்து வருகின்றனர்.

Categories

Tech |