சிறையிலிருந்த கைதி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புதுச்சேரி பகுதி சிவன் கோவில் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலையில் காளிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்ட காவல்துறையினர் உடனடியாக காளிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.