தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.