மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது .
மராட்டிய மாநிலத்தில் புதிய வகை வைரஸ், ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்கள், திருமண விழாக்களில் 50% வேறு மட்டுமே பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகமது நகரில் பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு அம்மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் சீரடி சாய்பாபா கோவிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.