ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த கேரளா – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரேட் ஸ்டிவர்ட் 14 -வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார் .
இதனால் 1-0 ன்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலையில் இருந்தது . இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேரளா அணியில் சகல் சமத் 27-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இதன் பிறகு 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.