திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை மீட்க ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறுமிகளை விற்ற பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளை விற்பது சட்டப்படி குற்றம் என்று இருக்கும் பொழுது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.