Categories
தேசிய செய்திகள்

ஓமைக்ரான் எதிரொலி…. அடுத்த 10 நாட்களுக்கு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெங்களூருவில் இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒமைக்ரான் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற 28 ஆம் தேதி முதல் பத்து நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |