திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் 4,60,000 தரிசனம் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுக்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1 முதல் 12-ஆம் தேதி வரை 10,000 இலவச தரிசன டிக்கெட்கள், 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5000 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10,000 தரிசன டிக்கெட்டுக்கள் என்று 1,60,000 டிக்கெட்கள் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 5,000 இலவச தரிசன டிக்கெட் டோக்கன்கள் கவுண்டரில் வினியோகிக்க தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை அலிபிரி சோதனை சாவடியில் தேவஸ்தான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி இரண்டு தவணை செலுத்தி இருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி மற்றும் சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.