Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் இதுவரை இல்லாத அளவிற்கு…. மோசமடையும் காற்று மாசு…. பொதுமக்கள் அவதி….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காற்று தரக்குறியீடு 430 ஆக பதிவாகி உள்ளதால் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று தரக்குறியீடு டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 375 ஆகவும், நொய்டாவில் 570 ஆகவும் பதிவாகியுள்ளது.

காற்று தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் இருக்கிறது என்று பொருள் அதேபோன்று 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கிறது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம். 200 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 500 வரை இருந்தால் மிக கடுமையாக காற்று மாசடைந்துள்ளது என்று அறியப்படுகிறது.

இந்த நிலையில் இருக்க வேண்டிய காற்று தரக்கூடிய அளவு தொடர்ந்து 400-க்கும் மேல் பதிவாகி உள்ளதால் தலை நகரில் வசிக்கும் மக்கள் பொது முடக்கம் அமலில் இருப்பது போல வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டுமெனவும், சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |