தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது:-
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்திற்கு வழக்கத்தைவிட கூடுதலாக மழை கிடைத்துள்ளது.
என்று அவர் கூறினார்.