Categories
தேசிய செய்திகள்

பசுவை கடத்தினால் சொத்துக்கள் பறிமுதல்…. புதிய சட்டத்திருத்தம் அமல்…. அரசு அதிரடி….!!!!

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையில் ஹிம்ந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். அந்த மாநிலத்தில் பசு வதையை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி என்று பசு பாதுகாப்பு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில், கோயிலை சுற்றி 5 கி.மீ க்கு மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பசு பாதுகாப்பு சட்டம் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி பசுவை கடத்தினால் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கால்நடை விற்பனையில் ஈடுபட்டு சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |