உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள அழகர்சாமி புரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் சக்திவேல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சக்திவேலை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையறிந்த பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.