ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஹைதராபாத் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதியது.இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் அமீர் டெர்விசெவிக் 20-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் .
இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி முன்னிலையில் இருந்தது .இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹைதராபாத் அணி வீரர் ஒக்பெச்சே 35-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 1`-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.