இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் விஜயன்வர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று தற்போது 3 மாத குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சேர்மக்கனி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேர்மக்கனியின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.