Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த முதியவர்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால் பாலையாவுக்கு காயம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த பாலையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலையா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |