ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின .
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கேரளா அணி ஆதிக்கம் செலுத்தியது இதில் முதல் பாதி ஆட்டத்தில் கேரளாஅணி 2 கோல்களும் , 2-வது பாதி ஆட்டத்தில் ஒரு கோலும் என மொத்தம் 3 கோல் அடித்தது. ஆனால் கடைசி வரை போராடிய சென்னை அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.