இந்தியர்களுக்கு மற்ற உணவுகளை விட பிரியாணி மீது அதீதமான பிரியமும், ஆசையும் இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அதிகமான ஆர்டர்கள் செய்யப்பட்டதில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 115 முறை ஆடர் செய்யும் அளவிற்கு முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் சிக்கன் பிரியாணி தொடர்ந்து 6-வது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது. 4.25 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.
இது சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஐதராபாத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி இருக்கிறது. ஆனால் மும்பையில் பருப்பு கிச்சடி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இங்கு உண்மையில் பிரியாணியை விட சிக்கன் ஃப்ரைட் ரைஸ், மசாலா தோசை மற்றும் பூண்டு ரொட்டிகள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் குருகிராமில் பிரியாணியை விட தால் மக்கானி மற்றும் மசாலா தோசை ஆகியவை டாப் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் இருக்கிறது.
மசாலா தோசையை விரும்பும் மற்றொரு வட இந்திய நகரம் லக்னோ ஆகும். கொல்கத்தாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் மட்டன் பிரியாணி மற்றும் வேகவைத்த மோமோஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 50 லட்சம் ஆர்டர்களுடன் சமோசாக்கள் அதிகம் சாப்பிடும் சிற்றுண்டியாக உள்ளது. 21 லட்சம் ஆர்டர்களுடன் இந்தியாவின் இரண்டாவது விருப்பமான சிற்றுண்டியாக பாவ்-பாஜி உள்ளது. அடுத்து குலாப்ஜாமுன் உள்ளது. சைவ உணவுகளில் 83 சதவீதம் அதிகரித்துள்ளது.