Categories
தேசிய செய்திகள்

நமக்கு எப்பவுமே பிரியாணி தான் பா….  தொடர்ந்து 6வது ஆண்டாக…. முதலிடத்தில் சிக்கன் பிரியாணி….!!!!

தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இடம்பிடித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். தற்போது சோசியல் மீடியா, ட்ரெண்டிங் வீடியோ, புகைப்படங்கள் என்று 2021 ஆம் ஆண்டு மனதுக்கு நெருக்கமான பல விஷயங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. மேலும் லாக்டோன் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத மக்கள் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தனர். அந்தவகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் 2021 ஆம் ஆண்டு இந்தியர்கள் பிரியாணி, சமோசா, குலோப்ஜாமுன் ஆகிய உணவுகளை மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து 6வது ஆண்டாக உணவு பிரியர்களின் அதிக விருப்பத்திற்குரிய உணவுப் பட்டியலில் சிக்கன்பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 6,04,44,000 பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சமோசா, குலோப்ஜாமுன் இடம்பிடித்துள்ளது.

Categories

Tech |