மதுரையில் கட்டடம் இடிந்ததில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை விளக்குத்தூண் காவல் நிலையதில் காவலராக சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் இருவரும் மதுரை கீழவெளியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திடீரென பழைமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் சரவணன் உயிரிழந்தார்.. மேலும் படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் இரவு ரோந்துப்பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் சரவணன் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த காவலரின் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்..
மேலும் பழமையான கட்டடம் இடிந்ததால் காயமடைந்த காவலர் கண்ணனுக்கு 5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..