Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் இழப்பீடு வழங்காததால்…. நீதிபதி அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கெங்குவார்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியுள்ளது. இதில் முருகனுக்கு கால் முறிந்துள்ளது. இதுகுறித்து முருகன் பெரியகுளம் சப்-கோர்டில் விபத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து வழக்கு நடந்த வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு முருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். எனவே முருகனின் மனைவி லட்சுமி தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வழக்கின் இறுதி விசாரணையில் 93,696 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்கள் ஆன நிலையிலும் அந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

எனவே லட்சுமி மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை உடனடியாக ஜப்தி செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற ஊழியர் மணி மற்றும் வக்கீல்களின் முன்னிலையில் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் போடிக்கு செல்ல இருந்த அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர்.

Categories

Tech |