‘மாநாடு’ வெற்றி விழாவிற்கு சிம்பு ஏன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் சிம்பு பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சிம்பு இந்த நிகழ்ச்சியில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தான் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக ஏற்பட்ட உரசல் காரணமாகவும் சிம்பு வரவில்லை என சிலர் கூறி வருகின்றனர்.