Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிள்ளைகளை தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. காரணம் என்ன?…. பெரும் சோக சம்பவம்….!!!!

கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லைஸ்தானம் உப்புமேட்டுத் தெருவில் சுரேஷ்- சுதா என்ற கணவன்- மனைவி வசித்து வந்தனர். இவர்களுக்கு சூர்யா, சுஜிதா என்ற மகள்களும், சுதர்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா கோவையில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். சுதர்சன் 9-ம்வகுப்பும், சுஜிதா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதனிடையில் சுரேஷ் தனது மாமியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது “உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே நீங்கள் உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று தெரிவித்துவிட்டு வைத்துள்ளார்.

இதனைதொடர்ந்து சுதாவின் தாயார் கிருஷ்ணவேணி ஊரிலிருந்து புறப்பட்டு தில்லைஸ்தானத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் மகள் சுதா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகிய இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |