தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. எப்பொழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பின்னர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.