Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான கட்டுப்பாடுகள்…. எல்லையோரம் தீவிர கண்காணிப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கூடலூர்-கேரளா எல்லையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் மைக்ரான் வைரஸ் பரவி வருகின்றது. மேலும் ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்களை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலார், நாடுகாணி உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனரா என்பதை அறிய எல்லையோர சோதனை சாவடிகளில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது 2 தவணை தடுப்பூசி செலுத்தாமல் வருபவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். மேலும் பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக கோழிகளை வளர்க்கும் உரிமையாளர்களிடம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |