தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பனி விழ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும் கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.