Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பங்களா ரோடு பகுதியில் வினோத் கண்ணன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர்களுடன் காக்காதோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் கண்ணன் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி வினோத்தை மீட்க முடியவில்லை.

எனவே அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடியும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வினோத் கண்ணன் உடலை மீட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எமனேஸ்வரம் காவல்துறையினர் வினோத் கண்ணன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |