Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய மூதாட்டி…. 2 வீடுகள் சேதம்….!!

சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் சுருளிப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வ.உ.சி திடல் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சிக்கிய மீனம்மாள் என்ற மூதாட்டியை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து மரம் முறிந்து விழுந்ததால் 2வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் சேதம் அடைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதற்குப் பின்னர் நகராட்சி ஊழியர்கள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |