Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் தாங்க முடியாமல்…. இளம்பெண் செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வளப்பூர் நாடு ஊராட்சி செல்லிப்பட்டு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் டிரைவரான இவர் கடந்த ஆண்டு தேவயாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தேவயாணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் தேவயாணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தேவயாணி வாழ்வில் விரக்தியடைந்து தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாழவந்தி நாடு காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவயாணியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாயும் விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |