Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 60 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 25 புகையிலைப் பாக்கெட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |