Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முரளியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் முரளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் முரளி கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், கடனை திரும்பக் கட்ட முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |