Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அந்த 300 ரூபாயை தாங்க….. தகராறில் ஈடுபட்ட தாய்-மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிமெண்ட் மூட்டைகள் வாங்கிய தகராறில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் தனபால் சாந்தி-தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்த் தியாகராஜன் என்பவர் நடத்தி வரும் கடையில் 20 சிமெண்ட் மூட்டைகளை 6,300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதில் 6,000 ரூபாயை சாந்தி தியாகராஜனிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சாந்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தியாகராஜன் மீதிமுள்ள 300 ரூபாயை தருமாறு கேட்டுள்ளார்.

இது குறித்து பேசுவதற்காக சாந்தி தனது மகள் அரவிந்தனுடன் தியாகராஜனின் சிமெண்ட் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அரவிந்த் தியாகராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தியாகராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரவிந்தனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |