Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாடு மேய்ப்பதற்காக சென்ற முதியவர்…. உறவினர்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் முதியவரின் சடலம் மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக இரட்டை குளக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் நம்பியார் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது இரட்டை குளத்தில் நம்பியாரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நம்பியாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |