சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் மீரான் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இசாக் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது வீடுகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீரான் மைதீன், முகமது இசாக் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.