ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி பிரிஜ்பூஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கண்ணத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர், அரண்டு போனார்.
மேலும் விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் கன்னத்தில் அறை வாங்கியவர் கூடுதல் வயது காரணமாக போட்டியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் எம்பி தனக்கு தெரியும் என்றும், அவர்தான் தன்னை போட்டியில் கலந்துகொள்ள சொன்னதாகவும், அந்த விழாவின் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த விபரம் எம்பிக்கு தெரியவர, அவர் நிதானமிழந்து அந்த நபருக்கு அரை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.