Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம்-கார் மோதி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மாதா ஆலயம் அருகே வேகமாக வந்த கார் சுமித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியுள்ளது.

இதனால் பலத்த காயமடைந்த சுமித்ரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |