புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடமனந்தோறும் மார்கழி 1-ஆம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மார்கழி 1-ஆம் தேதி என்பதால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
மேலும் கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எந்தவித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடாமலும், கோவிலின் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகளும் அழைத்து வரப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு பொது மக்களும் ஆவலுடன் கோவிலுக்கு வர தொடங்கினார்.
இதுபற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை அழைத்து அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என கூறி தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் தென்னலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.