Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த பட்டியலில்…. 7.5% பேர் பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது பற்றி நாடு முழுவதும் யுபிஎஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த-2020 ஆம் ஆண்டில் மொத்த மதுபான அளவு 22% குறைந்துள்ளது. மதுபானங்கள் ஒப்பீட்டளவில் 19.7% குறைந்துள்ளது. அதே நேரத்தில் பீர் உற்பத்தி 39.1% குறைந்துள்ளது. மேலும் தனிநபர் ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் (6.4 லிட்டர்) உலக அளவில் (6.2 லிட்டர்) மேலும் சராசரிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்( 5.5 லிட்டர்) குறைவாக உள்ளது.

நாடு முழுவதும் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 7.5% பேர் பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் குறிப்பாக, கொரோனாவுக்கு பின்னர், மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்திய மதுபான சந்தையைப் பொறுத்தவரை யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. மேலும் அதிக அளவில் விற்பனையாகும் பீர் ரகங்களில் யுனைட்டெட் புரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கிங்ஃபிஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் மதுபான பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகியவை இடம் பிடித்திருக்கின்றன. மேலும் கள் மற்றும் நாட்டுசாராய விற்பனையிலும் ஆந்திராவும், தெலுங்கானாவும் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்தநிலையில் காஷ்மீர், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை மிக குறைவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |