Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார்…. UIDAI புதிய திட்டம்…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு பால் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்க UIDAI திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்குவதற்கு பிறப்பு பதிவாளர் உடன் கூட்டணி அமைக்க UIDAI முயற்சித்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் 2 கோடி முதல் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களையும் இணையத்தில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே ஆதார் கார்டு வழங்கப்படும். குழந்தையின் படமும் அதில் சேர்க்கப்படும். இந்தியாவிலுள்ள 140 கோடி வங்கிக் கணக்குகளில் 120 கோடி கணக்குகள் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |