மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாரிதாஸை டிசம்பர் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . 3-வது வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாஸ் டிசம்பர் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவை அடுத்து மாரிதாஸ் தேனி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.