‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பை சரத்குமார் நிறைவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”கோடியில் ஒருவன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”.
மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை சரத்குமார் நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.