Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று…. வெளியான தகவல்….!!!

டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இது பொதுமக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |