Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவரின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பூண்டிபாளையம் பகுதியில் நல்லுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் நல்லுசாமி மிகவும் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நல்லுசாமி தனது மனைவியை அழைத்து கொண்டு அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு 2 நாட்கள் கழித்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து வீட்டிற்கு சென்ற நல்லுசாமி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது மனைவி ஹரிணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹரிணி மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லுசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு  நல்லுசாமி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |