Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறிகள் விலை சற்று குறைவு…. மும்முரமாக நடைபெற்ற உழவர் சந்தை…. 8 லட்சம் வரை விற்பனை….!!

உழவர் சந்தையில் 17¾ டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மொத்தம் 8 லட்சத்தி 57 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¾ டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், தக்காளி  74 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், கேரட் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 60 ரூபாய்க்கும், புடலங்காய் 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், இஞ்சி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. மேலும் கடந்த வாரத்தை விட தக்காளி மற்றும் கத்தரிக்காயின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |