வழக்கமாக மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வருகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும் என்று கூறப்படுகின்றது.
ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாள்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும். ஆனால் இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி வருகிறது.
பொதுவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி மார்கழி மாதம் சுக்ல் பட்ச ஏகாதசியன்று நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி மார்கழி இறுதியில் வருகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் திருவிழா தை மாதம் புனர்பூச நாளில் ஓடவேண்டும் என்பது நியதி. இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் 4ஆம் தேதியே வந்து விடுகிறது. இதனால் வைகுந்த ஏகாதசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டி உள்ளது. இது போன்ற நிகழ்வு 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும். வைகுண்டம் ஏகாதசியையொட்டி நாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.