நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தடுப்பூசி சான்றிதழ் சரி பார்த்த பிறகே டாஸ்மாக்கில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார்.